Monthly Archives: February 2022

மகிமை வாய்ந்த மாசி மகம்! மாசி மகம் சிறப்பு!!

மாசி மகம் சிறப்பு:

மாசி மாதம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புண்ணிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் முழுவதுமே புனித நீராடலுக்குரியது என்றால் மிகையாகாது.

ஒவ்வொரு ஆண்டிலும் சூரியன் கும்ப இராசியில் இருக்கும் போது மாசி மாதம் நடைமுறையில் இருக்கும். அம்மாத பெளர்ணமி நாளில் சூரியனும், சந்திரனும் நேர் எதிர் எதிராக இருக்கும் நாளில் தான் மாசி மகத் திருவிழா நடக்கும். இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும்

மாசி மகம் என்றாலே மக நட்சத்திரத்தின் தனித்துவமும் பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு வரும். ஆம்,பௌர்ணமி நிலவன்று மக நட்சித்திரம் வரும் நாளில் கொண்டாடப்படும் தமிழர் நன்னாளே மாசி மகம் எனப்படும். 

சரி, இந்த பெயரே சொல்கிறது மாசி மாதத்தில் தோன்றும் மக நட்சத்திரத்திற்கே மாசி மகமெனப் பெயரென.  இந்த மக நட்சத்திரத்தின் தனிப்பட்ட பெருமை என்ன?  நீங்கள் யோசிப்பது புரிகிறது.  இதோ மக நட்சத்திரத்தின் பெருமைகள் உங்கள் பார்வைக்காக.

மக நட்சத்திரத்தின் அருமைகள்:

 மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும் திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருகளுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.

பௌர்ணமியின் சிறப்பு:

பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக் கூடிய நாளாகும். 

மகமும் பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இந்த நாளில் இறைவனை வேண்டி நிற்போருக்கும். பித்ரு சேவை செய்வோருக்கும் நிறைந்த பலன்கள் கிட்டும்.

மாசிமகத்தை எப்படி கொண்டாடுவர்? 

மாசி மகத்தன்று கோயில்களில்  சிவ,  பார்வதி,  விஷ்ணு சிலைகளை புனித நீரில் நீராட்டி பூஜை செய்வது வழக்கம். இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று புனித நீர் நிறைந்த நதியிலோ, குளத்திலோ, கடலிலோ நீராட்டி பூஜை செய்வது வழக்கம். (சில கோவில்களில் கஜ பூஜை அல்லது அஸ்வ பூஜை செய்வது வழக்கம்). பக்தர்கள் அந்த தெய்வங்களை நீராட்டிய புனித நீரில் நீராடுவதால் தங்கள் பாபங்கள் தொலைந்து புண்யம் தேடிக் கொள்கிறார்கள். பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவார்கள். இறை அருள் பெறுவார்கள். இந்த நாளில் பார்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷ பலன்கள் கொடுக்கும்.  ஏதாவது ஒரு தீர்த்தத்தில் நீரடினாலே இந்த நாளில் நற்பலன்கள் கிட்டும்.அந்நாளில் இறை திரு உருவங்களை கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று எழுந்தருளச் செய்து திருமுழுக்காட்டுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழிபாட்டு முறையாகும்.

மாசி மகம் பித்ரு சேவைக்கு உகந்த நாள்

மாசி மகம் அன்று பித்ருக்கள் பூமிக்கு வந்து தங்கள் கர்மாக்களை தொலைப்பதாக கூறப்படுகிறது. இன்று பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசியும், தொடர்ந்து வந்து படுத்தும் வினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.  இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது.

மாசி மகம் கொண்டாடுவதின் புராண வரலாறு:

வல்லாள மகாராஜா என்பவர் திருவண்ணாமலையில் அரசாண்டு வந்தார். குழந்தை இல்லாத அவர் முன் எம்பெருமானாம் சிவன் ஒரு பாலகனாகத் தோன்றி அவர் இறக்கும் தருவாயில் அவர்தம் ஈமச் சடங்குகளை செய்வதாக வாக்களித்தார். அவ்வாறே அந்த அரசர் இறந்த அன்று சிவபெருமான் அவரின் ஈமச் சடங்குகளை செய்ததாக புராணம் கூறுகிறது. இன்று கூட மாசி மகம் அன்று சிவ பெருமான் பூமிக்கு வந்து அந்த அரசருக்கு உரிய சடங்குகளை செய்வதாக கருதப்படுகிறது.

மாசிமகத்தை பற்றி மற்றுமொரு புராணக் குறிப்புமுண்டு. எம்பெருமான் சிவனார் உலகத்தை அழித்து மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதை உணர்ந்த பிரம்மன் அவரிடம் மீண்டும் உலகத்தை உருவாக்குவது எப்படி எனக் கேட்டார். சிவனும் ஒரு கும்பத்தில் அமிருதத்தை நிரப்பி அதை மேரு மலையின் உச்சியில் வைக்கப் பணித்தார். பிரளயத்திற்கு பிறகு, உலகம் அழிந்த நிலையில் மீண்டும் அதனை உருவாக்க அந்த அமிருத கலசத்தை வைத்த இடத்திலிருந்து உபயோகிக்கக் கூறினார். பிரமனும் அப்படியே செய்தார். இது நடந்த தினம் மாசி மகம். ஆம்,பிரமன் மாசி மாதத்தில் மக நட்சத்திரம் தோன்றிய அன்றே  உலகை உருவாக்கினார். அந்த இடம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது. இந்த நாளில் சிவனாரின் சக்தி முழுமையாக அண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும்.

என்னப்பன் கந்தனாம் முருகவேள் தனது தகப்பனுக்கு உபதேசம் அளித்த திருநாளும் இதே.

மாசி மகத்தன்றே அன்னை பார்வதி தக்ஷனின் மகள் தாக்ஷாயணியாக அவதரித்தாள். எனவே பெண்டிர் இந்த நாளை விரதத்திற்கு உகந்ததாக கருதி அம்மனுக்கு பூஜை செய்து புண்ணியம் தேடுகிறார்கள்.

மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவர் என்பது ஜோதிட பழமொழி, அவ்வளவு சிறப்பு மிக்கது மக நட்சத்திரம். ஜகன் மாதாவாசிய தேவி தக்ஷபிரஜாபதி எனும் ஓர் அரசனின் மகளாக தோன்ற வேண்டி இருந்தது. எனவே, அலகாபாத் அருகே உள்ள காலிந்தி என்னும் இடத்தில் கங்கையின் கிளை நதியான யமுனா நதியில் புனிதமான ஒரு வலம்புரிச் சங்கின் வடிவில் தோன்றி மன்னனை அடைந்து அவரது வளர்ப்பு மகளானார். அப்படி தேவி பூவுலகில் தோன்றியது ஒரு மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் என்பது புராண வரலாறு.

பகவான் விஷ்ணு பூமியை பாதாளத்திலுருந்து எடுத்து வந்த வராஹ அவதாரத் திருநாளும் இதே.

மஹா மகம்:

மஹா மகம் என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை வருவது. இது தெற்கு இந்தியாவின் கும்ப மேளாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மஹாமக குளத்தில் அருமையாகக் கொண்டாடப்படுகிறது. லக்ஷக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் ஸ்நானம் செய்வதை பாக்யமாகக் கருதுகிறார்கள்.

மாசி மகம் தமிழர் திருநாள் 

மாசி மகம் தமிழ் பேசும் நல்லுலகம் உலகின் எந்தெந்த மூலைகளில் இருக்கிறார்களோ அத்தனை பேர்களாலும் கொண்டாடப்படுவது. கும்பகோணம், ஸ்ரீரங்கம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது. சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது.

இப்படியாக மாசி மகம் நம் இல்லல்களை விடுவித்து நன்மைகளை அளிக்கிறது. புண்யத்தை தேடிக் கொடுக்கிறது.

18 சித்தர்களும்! ஜீவசமாதியும்!!

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.
(18 Siddhargal and Jeeva Samadhi of Tamil Nadu)

  1. அகஸ்தியர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
  2. பதஞ்சலி – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
  3. கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
  4. திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
  5. குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
  6. கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
  7. தன்வந்திரி – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
  8. சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
  9. கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
  10. சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
  11. வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
  12. ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
  13. நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
  14. இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
  15. மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
  16. கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
  17. போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
  18. பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்

(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி) உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன். வாழ்க தமிழ், வளர்க தமிழ்… வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!

🙏 ஓம் நமசிவாய! திருச்சிற்றம்பலம்! வாழ்க வளமுடன்!🙏

தை கிருத்திகை சிறப்பு:- முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?…

நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.

வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை” என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு.

சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.

🙏முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

♠”வெல்” என்ற வினைச்சொல்லே நீண்டு ‘வேல்” என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும்.

பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.
முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்” என்ற பெயரும் உண்டு.

வேல் உணர்த்துவது என்னவென்றால்… வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது.

♠ வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

♠ வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.

மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு

‘ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க”

என்று சொன்னால்; மனம் லேசாகி விடும்.

வேலை 🙏 வணங்குவதால் ஏற்படும் பலன்கள் :

💥 காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.
💥 கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.
💥 வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
💥 சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.
💥 சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.
💥 கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.

🙏வெற்றிவேல்! வீரவேல்!!
என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும்,
முருகனின் ஆசியும் கிடைக்கும்🙏

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள்!

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள்

படத்தில் இருக்கும் மரம் தான் #கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று.

 இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம்.

இந்த மரத்திற்கு எதிர்மறை ஆற்றலை (#negative_energy) அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனால் தான் இந்த மரத்தால் ஆனா #சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள்.

இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை (நெகடிவ் எனர்ஜியை) வெளியேற்றும் சக்தி உண்டு. அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் கைத்தடி (#walking_stick) கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பின்தொடராமல் இருக்க, தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யப்பட்டிருக்க்கும்…

இந்த மரத்தில் தான் உலக்கை செய்வார்கள். உறுதியாக இருக்க பிரபஞ்ச ஆற்றல் உலக்கை வழியாக தானியங்களில் இறங்கி அந்த தானியங்களை நாம் உட்கொள்ளும் போது மிகுந்த ஆற்றல் நமக்கு கிடைக்கும். வயதுக்கு வந்த பெண்களின் அருகே இந்த உலக்கையை போட்டு வைப்பார்கள். சுடுகாடு சென்று வந்தவுடன் இந்த உலக்கையை தாண்டி வர சொல்வார்கள் எதற்காக என்றால் கெட்ட சக்திகளை நம்மை விட்டு அகற்ற தான்.

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில்தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்

(1) காற்று, கருப்பு அண்டாமல் இருக்க,

(2) குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க…

சிலருக்கு பக்கவாதம் ஒரு கை கால் செயல் திறன் குறைவாக இருந்தால், கை நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கருங்காலி கட்டைகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மர நிழலில் அடிக்கடி அமர்ந்து கொண்டு இந்த கட்டை ஊற வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் பிரச்சினை சரியாகும்.

அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு வந்து காய போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்கள். பின்பு மனதார வேண்டி கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள் மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே மாதிரி குல தெய்வத்தின் அருள் கிடைக்க வில்லை என்பவர் இதே போல் பொங்கல் வைத்தால் அதற்கு ஒரே ஒரு சின்ன கருங்காலி கட்டை போட்டால் போதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கி வந்தால் குல தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.

நன்கு படிக்காத குழந்தைகள் காலை வேலையில் படிக்கும் போது இந்த குச்சி மூலம் தலையில் மூன்று முறை தட்டி வரவேண்டும். ஒன்பது நாட்களில் குழந்தைகள் படிப்பில் மாற்றம் தெரியும். மெதுவாக குச்சியை தலையில் தொட்டு எடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பள்ளி கூடத்தில் இந்த குச்சியை தான் அடிக்க பயன் படுத்தினார்கள். வாத்தியார்கள் காலப்போக்கில் குச்சி மாறி விட்டது.

இந்த மரத்தில் தான் ஆதி காலத்தில் கடல் கடந்து செல்லும் படகுகளில் பாய்மரம் கட்டுவார்கள். இடி மின்னல் செங்குத்தான இந்த மரத்தில் இறங்கி கடலுக்கு அடியில் சென்று விடும் அதற்கு தான்.

வீதிகளில் ஜோசியம் குறி சொல்பவர் இந்த மர குச்சியை தான் நம் முன்னே நீட்டி கைகளில் வைத்தும் நம் மன எண்ணங்களை ஈர்ப்பார்கள். இப்போது உங்களுக்கு ஓரளவு இந்த மரத்தை பற்றி புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

கருங்காலி மரத்துன்டுகளுடன் தான்றிக்காய் கடுக்காய் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல் சளி இதயபலவீனம் சர்க்கரை வியாதி நீங்கும். இரத்த அழுத்தம் (Blood Pressure – பிளட் பிரஸர்) குறையும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

கிரகம் சரியில்லை என்று உடல் நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்கள் சரியாக இந்த கட்டை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்து முகத்தை கழுவி விட்டு கட்டையை மூன்று முறை மெதுவாக தட்டி வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

இந்த கட்டைகளை எரித்து அந்த சாம்பலை பேய் பிடித்து விட்டது என்கிறார்களே… அது அந்த மன சிதைவு நோய்க்கு நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம் தெரியும்.

இந்த மரம் மிதுனம், மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி மற்றும் விசாகம் நட்சத்திரத்தில் கேட்டை பிறந்தவர்களுக்கு இது உகந்த மரம்.

இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை மற்றும் பெற்றவை, இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.

இந்த மரத்தை வீடுகளில் வளர்க்கலாம். கோயில்களில் நட்டு வைக்கலாம், மிக நல்லது. மரம் வளர வளர உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

முருகனுக்கு மிக உகந்த மரம். ஆக மொத்தம் கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வ சக்தி இருக்கும் நல்ல தரமான உன்மையான கருங்காலி மாலைகள் குச்சிகள் விக்ரகங்கள் திரிசூலங்கள் வாங்கி வைக்கலாம் பண வரவு செல்வ வளம் அதிகரிக்கும்.

இதில் பல விதமான ரகசிய விடயங்கள் உள்ளது. சொல்ல நேரம் இல்லை, இதில் இரண்டு வகை உண்டு.

மரங்களிடம் இருந்தே மனிதன் ஆற்றலை பெறுகிறான், அதை ஏனோ மனிதன் உணருவது இல்லை.

நாட்டு மரங்களை தேடி தேடி விதையுங்கள், அது உன்னினத்தை காக்கும். இங்கு அபூர்வமான நாட்டு மரங்கள் அழிக்கப்படுவதும், உனக்கு சம்மந்தமே இல்லாத நச்சு மரங்கள் திணிக்கப்படுவதிற்கு பின்னால் உள்ள மர்மத்தை உணருங்கள்.

(மனிதனை விட மேலானவைகள் மரங்கள்)

நன்றி! வாழ்க!! நலமுடன்! வளமுடன்!!